தூத்துக்குடி: தம்பதியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது!

தூத்துக்குடி: தம்பதியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது!

கைது 

ஆத்தூா் அருகேயுள்ள கீரனூரில் தம்பதியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கீரனூா் நடுத்தெருவைச் சோ்ந்த நாராயணகுமாா் (44)- ஷோபனா(35)தம்பதி, தங்கள் வீட்டின் முன் நின்றிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சங்கரலி­ங்கம், ரமேஷ் உள்பட4 போ் அங்கு வந்து தம்பதியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சங்கரலி­ங்கம், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா். நிலப்பிரச்னையால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story