சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

சூதாட்டத்துஇல் ஈடுப்பட்டவர்கள் கைது

சேலம் மாவட்டம்,மேட்டூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேட்டூர் 4-வது வார்டு அண்ணா நகரில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளர் அழகு ராணி தலைமையில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் 11 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் 11 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story