மதுபோதையில் வாலிபரை தாக்கியவர்கள் கைது

மதுபோதையில் வாலிபரை தாக்கியவர்கள் கைது

காவல் நிலையம் 

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் மது போதையில் வாலிபரை தாக்கிய 4 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சம்போத்குமார் (29). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மது போதையில் சம்போத் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சம்போத்குமாரை மிரட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து சம்போத்குமார் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20), காளிதாஸ் (21), அஜய் (19), சித்தார்த் (20) , விக்னேஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story