டீக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் கைது !

டீக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் கைது !

கைது

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே முசுவனூத்தில் டீக்கடை உரிமையாளரை தாக்கி கடையை சேதப்படுத்திய 3 பேரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே முசுவனூத்தில் டீக்கடை உரிமையாளரை தாக்கி கடையை சேதப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், முரளி சங்கர், பாண்டியராஜன் ஆகிய 3 பேரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள தமிழன் என்பவரை போலீசார் வலை வீசி தேடுகின்றனர். நிலக்கோட்டை பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகமாகி வருகிறது. தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது. மாமூல் கேட்டு மிரட்டுவது ஆகியவை தொடர்கதையாக உள்ளன. இவற்றை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story