பணம் வைத்து சூதாடியவர்கள் கைது

பணம் வைத்து சூதாடியவர்கள் கைது

சூதாடியவர்கள் கைது

கரூர் மாவட்டம், தென்னிலை காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காட்டுபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 11 மணியளவில், காட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், நெத்திமேடு, காமராஜர் நகர் அருகே உள்ள வடக்கு கே.பி. கரடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும், சேலம் மாவட்டம், தளவாய்பட்டி, நடைய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் பணம் வைத்து சூதாடியது உறுதி செய்யப்பட்டது. மேலும், சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த, தென்னிலை காவல்துறையினர் பின்னர் இருவரையும் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story