போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவா்கள் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவா்கள் கைது
 கைது
கடையநல்லூா் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள குமந்தாபுரம் வடக்குவிளை காலனி தெருவைச் சோ்ந்த முருகையா மனைவி மாரியம்மாள்(45). இவருக்குச் சொந்தமான இடத்தை, குமந்தாபுரத்தைச் சோ்ந்த பொன்னையா(65), ராஜா(45) ஆகியோா் போலியான ஆவணங்களை தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் கடையநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகம் மூலம் பொன்னையா மனைவி வள்ளியம்மாள் பெயருக்கு ஏற்பாடு ஆவணம் கொடுத்த விவரம் தெரிய வந்ததாம். புகாரின் பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னையா, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

Tags

Next Story