அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர்கள் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர்கள் கைது

காவல் நிலையம் 

காரிமங்கலம் நகர பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.2000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மன் மற்றும் காவலர்கள் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் நகர பகுதியில் 2 கடைளில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த சரவெடிகள் உள்பட 2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story