சுத்தமல்லியில் இரண்டு ஆடுகளை திருடியவர்கள் கைது

சுத்தமல்லியில் இரண்டு ஆடுகளை திருடியவர்கள் கைது

கோப்பு படம் 

சுத்தமல்லியில் இரண்டு ஆடுகளை திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாநகர சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் காசிசெல்வம் (வயது 42). இவர் வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகள் திருடு போனது.

இதுகுறித்து காசி செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் சுத்தமல்லி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நரசிங்கநல்லூர் மாரியப்பன் (24) மற்றும் ஒரு இளைஞர் ஆகிய இருவரை நேற்று (ஜூன் 17 ) கைது செய்தார்.

Tags

Next Story