சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் .இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி , அமாவாசை நாட்கள் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் தற்போது சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோயிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி முதல் நாளை வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்லப் பக்தர்களுக்கு அனுமதி என்பது கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இன்று பௌர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டு பக்தர்கள் தற்போது மலையேறிச் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகச் சதுரகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திடீரென மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story