சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரிசுந்தர மகாலிங்கம் கோவிலில் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் .இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதாக சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த கோவிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சதுரகிரி கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். மாதந்தோறும் பிரதோஷம் , அமாவாசை , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி முதல் நாளை 22 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆணி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியான தானிப்பாறை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பின்பு அவர்கள் காலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இதனை அடுத்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story