அரிவாளை காட்டி மிரட்டல் : ஒருவர் கைது,மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

அரிவாளை காட்டி மிரட்டல் : ஒருவர் கைது,மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

கார்த்திக், கண்மணி

முகந்தனூர் அருகே மதுபோதையில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகந்தனூர் எண்கண் பிரிவு சாலை அருகே முகந்தனூர் கீழத் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் கண்மணி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியுமான கல்யாண மகாதேவி கட்டளை அன்னவாசல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய இருவரும் குடிபோதையில் ரோட்டில் நின்று கொண்டு வழியே சென்று வரும் பொது மக்களை அறிவாலை காட்டி மிரட்டி வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கண்மணி என்பவர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்து ஓடிய போது மது போதையில் இருந்து அவர் கால் தவறி ரோட்டில் விழுந்ததில் வலது கையில் எலும்பு கூறிவு ஏற்பட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களை மிரட்டிய மற்றொரு நபரான கல்யாண மஹதேவி கட்டளை அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story