கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

கைது

தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசலை சேர்ந்தவர் பூலோகபாண்டியன். இவருடைய மகன் இளையராஜா (வயது 33). கூலித் தொழிலாளி. இவரை புதுக்கோட்டை போலீசார் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கூட்டாம்புளி பாலம் அருகே வந்து கொண்டு இருந்த சொர்ணபாண்டியன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story