டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

பழனி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் மின்சார ட்ரான்ஸ்பாரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் மின்சார ட்ரான்ஸ்பாரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைரோடு அருகே மா.ஊத்தம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுமுருகன்(30). இவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை வழுக்கட்டாயமாக கீழே இறக்கி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது மாதிரி தொடர் சம்பவங்கள் நடந்து வருவதால் அனைத்து மின் கோபுரங்கள் மற்றும் மொபைல் டவர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எளிதில் ஏறாமல் இருக்க கம்பி வேலி அமைக்கும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story