அரசு ஊழியாருக்கு கொலை மிரட்டல்: சிறை தண்டனை விதிப்பு

அரசு ஊழியாருக்கு கொலை மிரட்டல்: சிறை தண்டனை விதிப்பு

நீதிமன்றம்

விருதுநகர் அருகே அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கபட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கான்சாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் ரத்தினம் வயது 70 இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் பாண்டியம்மாள் என்பவரை அடங்கல் மற்றும் பட்டா மாற்றம் தரக்கோரி தரகுறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் பாண்டியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில்கூமாப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் அந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ரத்தினம் என்பவரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் ,

கடுங்காவல் தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது

Tags

Next Story