ரயிலில் பட்டாசு கொண்டு சென்ற மூவர் கைது

ரயிலில் பட்டாசு கொண்டு சென்ற மூவர் கைது
ரயில் நிலையம் 

தீபாவளி பண்டிகையை கொண்டாடடுவதற்காக விருதுநகர், சிவகாசி பகுதிகளுக்கு பலர் வந்து பட்டாசுக்களை வாங்கி செல்கின்றனர். பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தில் பட்டாசுக்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர், சிவகாசி ரயில்வே ஸ்டேஷன்களில் பட்டாசுக்கள் கொண்டுச் செல்லப்படுகிறதா என ரயில்வே காவல் ஆய்வாளர் ரஜினி நாயர், சார்பு ஆய்வாளர் மலையாண்டி தலைமையில் தொடர்ந்து கண்காணித்து, சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மோகன் குமார் 27, சிவகங்கையைச் சேர்ந்த பிரவீன் 30, நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வடிவேலு 41, ஆகியோர் பட்டாசு வாங்கி ரயிலில் எடுத்துச்செல்ல முயன்றதை சோதனையில் கண்டறிந்தனர்.இவர்கள் மூவரையும் கைது செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் ஓப்படைத்தனர். மேலும் விருதுநகர், சாத்துார், சிவகாசி உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு பணிகள் தொடரும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story