குறவபட்டியில் சூதாடிய மூவர் கைது

குறவபட்டியில் சூதாடிய மூவர் கைது. ரூ. 450 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
குறவபட்டி பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூதாடிய மூவர் கைது. ரூ. 450 பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குறவப்பட்டி பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் நவம்பர் 25ஆம் தேதி மதியம் மூன்று முப்பது மணி அளவில் குறவப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குறவப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அரவக்குறிச்சி தாலுகா, நந்தனூர் பகுதியைச் சேர்ந்த மகாசாமி வயது 65, குறவப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி வயது 56, மற்றும் மற்றொரு மகாசாமி வயது 50 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 450-ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story