சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்ட மூவர் கைது
சட்டவிரோத மதுவிற்பனை
சிவகங்கை மாவட்டம், மனாமதுரையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மானாமதுரை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்‌. அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த கார்த்தி (41), அங்கு சாமி (33),வேல்முருகன் (36) ஆகிய 3 பேரையும் மானாமதுரை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story