காரில் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய மூவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாலையில் காரில் புகையிலை கடத்திய மூவர் கைது செய்து காரை பறிமுதல் செய்த போலீசார்.
விருதுநகர் - சிவகாசி ரோட்டில் காரில் 100 கிலோ தடை புகையிலை கடத்தலில் ஈடுப்பட்ட ஈஸ்வரன் 36, சரவணன் 23, முருகன் 40 மூவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் அருகே பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 36, காரியப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 23 இருவரும் பெங்களூரில் இருந்து காரில் 100 கிலோ தடை புகையிலையை பதுக்கி காரியப்பட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர்.இதை பாவாலியைச் சேர்ந்த முருகன் 40, என்பவரிடம் விருதுநகர்,சிவகாசி ரோட்டில் விற்பனை செய்ய முயன்றதை போலீசார் கண்டறிந்து, காரை பறிமுதல் செய்தனர். ஆமத்துார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story