செல்போன் மற்றும் பைக் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

செல்போன் மற்றும் பைக் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

திண்டிவனத்தில் செல்போன் மற்றும் பைக் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


திண்டிவனத்தில் செல்போன் மற்றும் பைக் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம், 39; கொத் தனார். இவர் கடந்த 31ம் தேதி மாலை திண்டிவனம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, ரோஷணையைச் சேர்ந்த கிடங்கலான் என்கிற சரண்ராஜ், 38; மற்றும் உடன் வந்த இரண்டு பேர், ராமானுஜத்தை இரும்பு ராடால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல் போன், பைக்கையும் பறித்துச் சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, கிடங்கலான் என்கிற சரண்ராஜ், அவரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 30; விஜய், 21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை சந்தைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story