மின் உபகரணம் திருட முயன்ற மூவர் கைது

மின் உபகரணம் திருட முயன்ற மூவர் கைது
உத்திரமேரூரில் மின் உபகரணம் திருட முயன்ற மூம்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில், நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெங்கட் ஐயா பிள்ளை தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று பேர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது, அங்கிருந்த காலி மனை ஒன்றில், மின்வாரியம் சார்பில் வைத்துள்ள மின் ஒயர்கள் மற்றும் மின்மாற்றிக்கான மின் உபகரண பொருட்கள் போன்றவற்றை அவர்கள் திருட திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், உத்திரமேரூர் அடுத்த வயலுாரைச் சேர்ந்த காளீஸ்வரன் 25, சக்திவேல், 23, கார்த்திக், 22, ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story