மூன்று பேரின் சடலம் மீட்பு

மூன்று பேரின் சடலம் மீட்பு

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் மேம்பாலத்தின் அடியில் மூன்று பேரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.


மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் மேம்பாலத்தின் அடியில் மூன்று பேரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் -சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர் மேம்பாலத்தின் அடியில் கடும் துர்நாற்றம் வீசியது. இன்று அவ்வழியாக சென்றவர்கள் எட்டி பார்த்துள்ளார் ஒரு சடலம் இருந்ததால் ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் நேரில் வந்து பார்த்தபொழுது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணின் சடலமும் அருகில் ஒரு மொபட்டும் இருந்தது. அருகே மது பாட்டிலும் தண்ணீர் இருந்த நிலையில் அருகே ரத்தம் உறைந்து காணப்பட்டது. மூவரும் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை.சடலத்தை கைப்பற்றிய ஜலகண்டபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது மர்மமாக உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story