மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா 

லால்குடி அருகே புள்ளம்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தகைசால் தமிழர் சங்கரய்யா படத்திறப்பு விழா, குடும்ப விழா, பாராட்டு்விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா பட திறப்பு விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெருவளநல்லூர் சண்முகத்திற்கு பாராட்டு்விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப விழா என முப்பெரும் விழா புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது.

முதலில் தகைசால் தமிழர் சங்கரய்யா திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய குழு உறுப்பினர் சண்முகத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப விழாவில் கட்சி நிர்வாகிகளிடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு சந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிசாமி, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட செயற்குழு சிவராஜ்,விசிக நிர்வாகி விடுதலைஇன்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story