ஓமலூரில் மனித உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா

ஓமலூரில் மனித உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா


ஓமலூரில் மனித உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் மனித உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறுவனர் சுரேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி அனைத்து கிராமங்களிலும் கிளைகளை உருவாக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கும் மாற்றுத்திறனாளி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆலோசனை தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ் கிருஷ்ணன் பசுபதி கண்ணன் சுரேஷ்குமார் நல்லதம்பி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story