சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

 முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் சங்கராபுரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலத்தில் உலக தாய் மொழி தினம், மகளிர் தினம், தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது. சுங்கம் மற்றும் கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முத்தமிழ்ச் சங்க மாவட்ட தலைவர் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை, அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி, கோவிந்தம்மாள், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அண்ணாமலை முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைமுருகன், கல்லை முத்தமிழ் முத்தன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அஜித் நன்றி கூறினார்.

Tags

Next Story