கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வெடித்ததில் மூன்று வீடுகள் சேதம் !

கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வெடித்ததில் மூன்று வீடுகள் சேதம் !

வீடுகள் சேதம்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வெடித்ததில் மூன்று வீடுகள் சேதம் : தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் வெடிபொருட்கள் வெடித்ததால் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வெடித்ததில் மூன்று வீடுகள் சேதம் : தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் வெடிபொருட்கள் கொண்டுவந்து வெடி வெடித்த நிலையில் மேலும் இரண்டு வெடி மருந்துகள் வெடிக்காமல் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகேயுள்ள துரைசாமி கொட்டாய் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தரமான சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்த சாலையில் புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என சாலையின் சிமென்ட் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோன்றியுள்ளனர். இதில் தரமாக பயன்படுத்தி வந்த இந்த சிமென்ட் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் இருந்த பொது மக்களுக்கு எவ்வித அறிவிப்புகளும் செய்யாமல் பாறைக்கு வெடிவைத்து தகர்த்துள்ளனர் இதனால் அருகில் இருந்த சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல்கள் மற்றும் சேதம் அடைந்து ஓடுகள் கீழே விழுந்து சரிந்து கிடக்கின்றன. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அவரிடம் அப்பகுதி மக்கள் கேட்ட பொழுது விரிசல் உள்ள பகுதியை சிமெண்ட் மூலம் பூசி வண்ணம் தீட்டி கொடுக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த பாதிப்படிந்த மக்கள் எங்களுக்கு புதியதாக வீடு கட்டி தர வேண்டும் எனவும் மேலும் குடியிருப்பு பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு வெடிமருந்துகள் அப்புறப்படுத்தாமல் அப்படியே உள்ளது. அதனை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் எனும் இல்லையெனில் வெயிளின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாகி அவ்விடத்தில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நல்ல தரமான முறையில் இருந்த சிமென்ட் சாலையை சேதப்படுத்தி கழிநீர் கால்வை அமைக்கும் பணியினை மேற்கொண்ட பொழுது மூன்று வீடுகள் சேதம் அடைந்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு உள்ள நிலையில் தற்பொழுது வெடி மருந்துகள் வாங்கி வெடி வைக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

Tags

Next Story