டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

டூவீலர்கள் மோதிய விபத்தில்  மூவர் படுகாயம்

டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய  விபத்தில் ஒரு பெண், நான்கு வயது சிறுவன் உள்பட மூவர் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படை, எலந்தகுட்டை பகுதியில் வசிப்பவர், திவ்யா, 27. இவர் தனது 4 வயது மகன் தியாஸ் ஆத்விக்கை, அக்செஸ் டூவீலரில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 12:30 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் ஸ்ப்லேண்டர் டூவீலரில் உட்கார்ந்தபடி போனில் பேசிக்கொண்டிருந்த நபர், எதிர்பாராத விதமாக வலதுபுறம் திருப்ப, திவ்யா வந்த டூவீலர் மீது மோத, மூவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணையில் விபத்துக்கு காரணமானவர் தனியார் நிறுவன பணியாளர், குப்பாண்டபாளையத்தை சேர்ந்த கவுதம்குமார், 24, என்பது தெரியவந்தது. கவுதம்குமார் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயும் மகனும் நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story