சாலையோர தடுப்பின் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் மூவர் காயம்

சாலையோர தடுப்பின் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் மூவர் காயம்
X

விபத்து

விருதுநகர்- சாத்தூர் நெடுஞ்சாலையின் சாலையோர தடுப்பின் மீது இருசக்கர வாகன மோதி விபத்தில் மூவர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வி ராமலிங்கபுரத்தைச் சார்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது மனைவி முத்துமணி மற்றும் மகன் மித்ரன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் - சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர் ஆர் நகர் ராம்கோ வித்யாலயா பள்ளிக்கூடம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோட இரும்பு தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய முத்துக்குமார் முத்து மணி மித்திரன் ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story