பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விமானப்படை தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமான மூலம் சூலூர் விமான படைத்தளத்திற்கு 27ம் தேதி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூலூர் விமான படைத்தளத்திற்கு பிரதமர் வருகையை ஒட்டி சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் வருகையை ஒட்டி சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் விமான தளத்தை சுற்றி 500 மீட்டர் அளவில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story