மாயமான மூன்று சிறுவர்கள்- போலீசார் விசாரணை 

மாயமான மூன்று சிறுவர்கள்- போலீசார்  விசாரணை 

மாயமான மூன்று சிறுவர்கள்

குமரி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் காணவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றன.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் ஜெகன் 40. இவர் கருங்கல் அருகே உள்ள மங்கல குன்று பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடன் பிரியா (36 ) என்பவர் தனது பிள்ளைகளுடன் ஜெகன் வீட்டில் வசித்து வருகிறார். பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி தற்போது ஜெகனுடன் குடும்பம் நடத்துவதாக தெரிகிறது. நேற்று காலையில் பிரியா தூங்கி எழுந்த போது, வீட்டு முன்பக்க கதவு பூட்டப்பட்டு கிடந்தது. வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் சிவா ஷைனு (14), சிவா ஷானு (13), சிவா ஹரிஷ் (10) ஆகிய மூன்று மகன்களையும் காணவில்லை. வீட்டில் இருந்த சைக்கிள்களையும் காணவில்லை. இதையடுத்து பிரியா பக்கத்து வீட்டினர் உதவியுடன் கதவை திறந்து சுற்று வட்டார பகுதிகளில் தேடி உள்ளார் மாயமான மூன்று மகன்களின் பள்ளியில் அவர்களுடன் படிக்கும் மாணவர்களிடமும், தொடர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் மகன்கள் குறித்து விசாரித்துள்ளார். எந்த வித தகவலும் கிடைக்காததை அடுத்து நித்திரவிளை போலிசில் பிரியா புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மாயமான மூன்று சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story