லாட்டரி விற்ற மூன்று பேர் கைது

லாட்டரி விற்ற மூன்று பேர் கைது

லாட்டரி விற்ற மூன்று பேர் கைது

திருவெறும்பூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேர் கைது.
திருவெறும்பூர் அருகே காட்டூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் தெற்கு காட்டூர் கமலா நேரு நகரை சேர்ந்த மோகன் திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த பத்மநாபன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று வாகனங்களையும் 3 மொபைல் போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 10,400 பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story