ஆட்டோவில் பேட்டரி திருடிய மூன்று பேர் கைது

ஆட்டோவில் பேட்டரி திருடிய மூன்று பேர் கைது

காவல்துறை விசாரணை


குலசேகர மாதிரி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் பேட்டரி திருடிய 3 நபர்கள் கைது.
குலசேகரம்அருகே உள்ள அரமன்னம் செறுப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது ஆட்டோவை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.இதனால் தூங்கி கொண்டி ருந்த ஜோஸ் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது ஆட்டோவில் 3 பேர் பேட்டரியை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் ஜோஸ் சுற்றி வளைத்து பிடித்தார்.அவர்களை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் குலசேகரம் மாமூடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்களாக லிபின்ராஜ்,ஸ்டாலின் ராஜ் புதுக்கடையைச் சேர்ந்த தம்பிராஜ் என்பது தெரிய வந்தது. நண்பர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பல இடங்களில் இதுபோன்ற சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது இதை எடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story