கார் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
![கார் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு கார் விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு](https://king24x7.com/h-upload/2024/05/15/513171-1000062959.webp)
விபத்து
செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கிழக்கு கடற்கரை கூவத்தூரில், இருந்து சென்னை நோக்கி பயணித்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. அங்கு நின்றிருந்த பசுமாடு சாலை கடக முயன்றபோது , வாகனத்தை திருப்பியதால் திடீரென வேகத்தை கட்டுப்படுத்தியதால் தரை புரண்ட கார் விபத்துக்குள்ளாகியது.
இதனை அடுத்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து உடனடியாக காரில் இருந்த, உயிருக்கு போராடி இருந்த நபர்களை மீட்க முயற்சி செய்தனர். இதுகுறித்து உடனடியாக சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். முதற்கட்டமாக காரில் உயிருக்கு போராடி இருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் பொதுமக்கள் உதவி உடன் மீட்டு, இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் பின்புறத்தில் சிக்கிய மூன்று பேர் கார் நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் சிக்கியவர்களை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராடி காரின் கூடாரத்தை மிஷின் மூலம் வெட்டி எடுத்து உடல்களை மீட்டு உடற்குறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
மேலும் இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அதிவேகத்தில் இயக்கியதால் இத்தகைய விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
அதேபோன்று குறுக்கே மாடு வந்தது என நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலையும் காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர்.