மணவாடி மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

மணவாடி மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ 250 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில், மணவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள மயானம் பகுதியில் பணம் வைத்த சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, வெள்ளியணை, பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த கோகுல், ஐயப்பன், ஜெகதீசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்டைகளையும், ரூபாய் 250-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியனை காவல்துறையினர்.

Tags

Next Story