பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

கூனம்பட்டி பிரிவு அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் போலீசார் கைது செய்தனர்.

கூனம்பட்டி பிரிவு அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 300 பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கூனம்பட்டி பிரிவு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 21ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கூனம்பட்டி பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அருகில் உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை, மேற்கு கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், புகலூர் தாலுகா, தொட்டம்பட்டி, உப்பு பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story