பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

ஆலமரத்துப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ 300 பறிமுதல்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஆலமரத்துப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 5 மணி அளவில், ஆலமரத்துப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. எனவே, சூதாட்டத்தில் ஈடுபட்ட அரவக்குறிச்சி, ரங்கராஜ் நகரை சேர்ந்த ராம்குமார், பெரிய மஞ்சுவலி பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்கிற மீன்காரன், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.300-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story