பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது !

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது !

சூதாட்டம்

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 5900 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 5900 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் 16ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புத்தாம்பூர் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு செல்வராஜ், ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 5900-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story