பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது : ரூபாய் 400- பறிமுதல்

மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 400- பறிமுதல்.
மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு ரூபாய் 400- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஈசநத்தம் புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 24ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஈசநத்தம் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள புதிய மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சேர்வைக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன், கரூர் கோடங்கிபட்டியை சேர்ந்த பொன்னுசாமி, அரவக்குறிச்சியை சேர்ந்த செந்தில் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 400-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story