சாராயம் வைத்திருந்த மூன்று பேர் கைது

சாராயம் வைத்திருந்த மூன்று பேர் கைது

கைது

விழுப்புரம் மாவட்டம்,வி.கேணிப்பட்டு பகுதியில் சாராயம் வைத்திருந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,கிளியனுார் அடுத்த வி.கேணிப்பட்டு பகுதியில் கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 52; என்பவர் புதுச்சேரி மாநில சாராயம் 5 லிட்டர் வைத்திருந்தது தெரிய வந்தது. உடன், போலீசார் அவரை கைது செய்தனர்.இதே போன்று தேற்குணம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடத்திய சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 45; சரவணன், 31; ஆகிய இருவரும் தலா, 5 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story