கண்டெய்னர் லாரி மோதி பேருந்தில் சென்ற மூன்று பேர் பலி !

கண்டெய்னர் லாரி மோதி பேருந்தில் சென்ற மூன்று பேர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் மாலோலன் கலை அறிவியல் கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் வழக்கம்போல் இன்று தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு வந்தபோது தனியார் பேருந்தை முந்திய கண்டெய்னர் லாரி பேருந்தில் ஒரசியதால்,மோனிஷ், கமலேஷ் உள்ளிட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story