மது பாட்டில்கள் விற்ற மூன்று பேர் கைது!

மது பாட்டில்கள் விற்ற மூன்று பேர் கைது!

மூன்று பேர் கைது!

கொடும்பாளூர், தென்னம்பாடி, கீரனூர் பிரிவு சாலை பகுதிகளில் மது விற்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி மதுவிற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் கொடும்பலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகிரி குலவாய்ப்பட்டி சேர்ந்த பிச்சையா என்பவரையும், தென்னம்பாடி அரசு பள்ளி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட தென்னம்பாடி தெற்கு காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரையும், கீரனூர் பிரிவு சாலை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட விராலிமலை அருண் காலனியைச் சேர்ந்த நல்லு என்பவர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story