பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது. 6 கிலோ கஞ்சா பறிமுதல்.
பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது-6 கிலோ கஞ்சா பறிமுதல். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி தலைமையிலான போலீசார் கரைப்புதூர் கோட்டக்காடு பகுதியில் விற்பனையில் ஈடுபட முயன்ற ஒடிசாவை சேரந்த புருயோட்டம் மஜ்ஹி 20,மனோஜ் மஹாகுர் 31,ஜித்தன் 22 ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story