முதியவர் மீது தாக்குதல் - சிறுவன் உட்பட மூவர் கைது

முதியவர் மீது தாக்குதல் - சிறுவன் உட்பட மூவர் கைது

முதியவர் மீது தாக்குதல் 

கொரடாச்சேரியில் பொது இடத்தில் அமர்ந்து மது குடிப்பதை தட்டி கேட்ட முதியவர் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொரடாச்சேரி கம்பன் கொலை தெருவை சேர்ந்த முதியவர் சூர்யதிலகன் 86. கொரடாச்சேரி கம்பன் கொலை தெருவை சேர்ந்த முதியவர் சூர்ய திலகன் இலாகி மில் சந்து பகுதியில் பொது இடத்தில் அதே தெருவை சேர்ந்த தங்கமுத்து, காஞ்சப்பன் மற்றும் சிறுவன் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.

இதனை தட்டி கேட்ட முதியவரை தகாத வார்த்தையால் திட்டியும் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் முதியவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த முதியவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரையும் கொரடாச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story