ஓடும் அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பெண்கள் கைது !

ஓடும் அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பெண்கள் கைது !

கைது

திருவட்டார் அருகே ஓடும் அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தக்கலை அருகே வடக்குகரைவிளை, கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலுக்கண்ணு இவரது மனைவி காமாட்சி வயது.இவர் கணபதிபுரம் பேருராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் நேற்று மாலை இவரின் உறவினர் வீட்டு மரண துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தக்கலையில் இருந்து ஆற்றூர் செல்லும் மகளிர் இலவச பேருந்தில் ஏறினார் பஸ்சில் மகளிர் சீட்டில் ஒரமாக உட்கார்ந்து இருந்தார் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் பயணிகள் நெருக்கமாக நின்று கொண்டு இருந்தார்கள் அதே பஸ்சில் மூன்று பென்கள் ஒன்றாக நின்று கொண்டு இருந்தார்கள் பஸ் வேர்கிளம்பி பஸ் ஸ்டாப்பில் வரும் போது துப்பரவு பணியாளர் காமாட்சி தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கீழே இறங்கினார்.

தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயின் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே அதே பகுதியில் நின்ற ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு தான் வந்த பஸ்சை பின் தொடர்ந்து விரட்டி சென்றார் பஸ் வியனூர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றது உடனே பஸ்சில் இருந்து மூன்று பெண்கள் இறங்கி வேகமாக நடந்து சென்றார்கள் அவர்களை துப்பரவு பணியாளர் காமாட்சியும் ஆட்டோ டிரைவரும் பொதுமக்கள் எல்லோரும் சுற்றி வளைத்து மூன்று பெண்களையும் பிடித்தனர் உடனே திருவட்டார் போலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலிசார் சென்று மூன்று பெண்களையும் பிடித்து திருவட்டார் போலிஸ் ஸ்டேசன் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரனையில் மூன்று பேரும் சேலம் .மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.அதில் காவேரி,ஆஷா ,மல்லிகா என்பது விசாரனையில் தெரிய வந்தது .துப்பரவு பணியாள் காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து தக்கலை மகளிர் ஜெயிலில் இன்று அடைத்தனர்.

Tags

Next Story