அன்னூர் அருகே போலீசாரை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது

அன்னூர் அருகே போலீசாரை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

அன்னூர் அருகே போலீசாரை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன். நேற்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில் நின்று மது குடித்து கொண்டு இருந்துள்ளனர்.அதனை பார்த்த போலீசார் இங்கு நின்று மது குடிக்க கூடாது என கூறி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் போலீசாருக்கும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கி உள்ளனர். இதனையடுத்து காவலர்கள் அது குறித்து அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் அங்கு விரைந்து சென்ற சக போலீசார் காவலர்களை தாக்கி மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கிருத்திக், ஈஸ்வரன்,பிரதீஷ் என்பதும் இவர்கள் மூவரும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் மது போதையில் போலீசாரிடமே தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story