தனியார் நிறுவன கண்ணாடியில் கல்வீச்சு

தனியார் நிறுவன கண்ணாடியில் கல்வீச்சு
காவல் நிலையம் 
விருதுநகர் பேராளி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் கண்ணாடியை கல்லால் எரிந்து சேதப்படுத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கருப்பசாமி நகர் பகுதி சார்ந்தவர் கிருஷ்ணசாமி வயது 50 இவர் பேராலி சாலையில் உள்ள ராஜலட்சுமி ஸ்பின்னிங் மில்லில் கடந்த ஐந்து வருடங்களாக வாட்ச்மேனாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் பணியில் இருந்த போது அலுவலகத்தின் கண்ணாடியை யாரோ கல்லால் எறித்து உடைத்த சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்த பொழுது அங்கு விருதுநகர் முத்தால் நகர் பகுதியை சேர்ந்த மாரிராஜ் என்பவர் கையில் கல்லுடன் நின்று கொண்டிருந்ததாகவும்,அவர் பிடித்து விசாரணை நடத்திய பொழுது அவர் கல்லால் கண்ணாடியை எரிந்ததாகவும் அப்படித்தான் எரிவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story