திண்டிவனம் : பெட்டிக்கடையில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டிவனம் : பெட்டிக்கடையில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

 மணிகண்டன்

திண்டிவனம் அருகே பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் திண்டிவனம்- செஞ்சி மெயின் ரோடு தீவனூரில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கடையில் தடைசெய்யப்பட்ட 5 ஆயிரம் பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன்(வயது 34) என்பவரை பிடித்து திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story