டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

தர்மபுரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளியில் டிப்பர் லாரிகளை நிறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

இதில் தர்மபுரி மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரிகள், எம்.சான்ட்,சிறு மற்றும் பெரு ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பதை போன்று பழைய விலைக்கே வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு விலை சுமையை ஏற்றும் வகையில், கட்டுமான பொருட்கள் விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முனேந்திரன்,பொருளாளர் கோபால், துணை செயலாளர் முருகன், ரங்கன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், டிப்பர் லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story