திருச்செந்தூர் : காவல் நிலையங்களில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

திருச்செந்தூர் : காவல் நிலையங்களில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

எஸ்பி ஆய்வு 

திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேற்று திருச்செந்தூர் தாலுகா மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய போலீசாருக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கெளரி மனோகரி உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story