திருச்செங்கோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி அறிஞர் அண்ணா நகர், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி அறிஞர் அண்ணா நகர், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சுரேஷ் பாபு, மருத்துவர் ரவி,நகர்மன்ற உறுப்பினர் மல்லிகா, ராஜா, முன்னாள் கவுன்சிலர் பாவாயி ஆகியோர் உடன் இருந்தனர். பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

Tags

Next Story