திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டம்

திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டம்

திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டம்  

திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை தாங்கி, திருக்குறள் வாசித்து துவக்கி வைத்தார். நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப் படும் தினசரி அங்காடிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு தினசரி சந்தை என பெயர் வைத்து நினைவு வளைவு அமைக்க நகர்மன்றத் தலைவர் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான 84 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து தீர்மானங்களின் மீது பேசிய உறுப்பினாகள் ரவிக்குமார், ராஜவேல் ஆகியோர் நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து சீர்படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, இனி வருங்காலங்களில் நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.

Tags

Next Story